Sunday, January 10, 2010

நெடுந்தூரம் செல்ல வேண்டும்...


நெடுந்தூரம் செல்ல வேண்டும்...

அது குளிர் காலம்.
மாலை நேரத்தில்,
நான் அங்கு நின்றேன்-ஏன்?

அழகான பூந்தோட்டம்.
குளிர்ந்த காற்றில்,
ஆடுகின்ற மலர்கள்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை,
தலையாட்டும் மலர்கள்-யாருடையது?
என் ஊரை சேர்ந்தவருடையது.

எனது மாடுகள் தலையாட்டின.
மணிசலங்கை ஒலி உணர்த்தின.
நான் வீடு சென்றடைய வேண்டும்.

மலர் கூட்டத்தில் இருந்து,
என் கண்களை விடுவித்தேன்.
பார்த்தேன். நெடுந்தூரம் செல்ல வேண்டும்.

ஒற்றையடி மாட்டு வண்டி பாதை அது,
ஊர் சென்றடைய நான்,
நெடுந்தூரம் செல்ல வேண்டும்.

மன நினைவலைகளில்,
மலர் கூட்டம் அழகு-குளிர் காற்று தழுவ,
பயணத்தை தொடர்ந்தேன்.

ஒற்றையடி மாட்டு வண்டி பாதை அது.
ஊர் சென்றடைய நான்,
நெடுந்தூரம் செல்ல வேண்டும்.

-கே.வி. நிக்சன்.

No comments:

Post a Comment