Wednesday, February 2, 2011

பழமையும் புதுமையும்

மொழி பேதமில்லை
கவிஞர்கள் பல...
கவிதைகள் பல...
கற்பனைகள் பல...
கருத்துக்கள் பல...
சொற்கோர்வை பல...
இன்றும்
கவிஞர்கள் பல, கவிதைகள் பல.
கற்பனை பழையது, கருத்துக்களும் பழையது.
சொற்கோர்வை மட்டுமே புதியது.

கே.வி. நிக்சன்.

கவிதை

கவிதை-அது
ஆத்மாவின் சங்கீதம்.
தன்னுள் தன்னை தேடுகிற போது,
மனம் மவுனமாகிறது.
ஞானம் பிறக்கிறது.
மனிதனே-நீயே
ஒரு மகத்தான (க)விதை.

கே.வி.நிக்சன்.