Thursday, April 8, 2010

சிந்துதுர்க் கோட்டை




மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களில் சிந்துதுர்க் கோட்டையும் ஒன்று. 345 ஆண்டுகள் பழமை மிக்க இந்த கோட்டை சிவாஜி மகாராஜாவால் கட்டப்பட்டது. கடலுக்கு நடுவே சிறு தீவு போல காட்சி தரும் இந்த கோட்டையை தற்போது இந்திய அகழ்வாராய்ச்சித்துறை ஆய்வு செய்து வருகிறது. இந்த கோட்டைக்குள்ளே சிவ்ராஜேஸ்வர் கோயில் என்ற பெயரில் சிவாஜி மகாராஜாவுக்கு கோயில் ஒன்று உள்ளது. மகாராஷ்டிராவுக்கு சுற்றுலா செல்பவர்கள் சிந்துதுர்க் கோட்டையை விட்டுவிடாதீர்கள்.

-கே.வி. நிக்சன்.

Wednesday, April 7, 2010

வாழ்க்கையை வாழ வேண்டும்...


யார் சொல்லி என்ன நடக்கும்

நேற்றும் இன்றும் நாளையும்-எனக்கு ஒன்றுதான்
நேற்று வாழ்ந்தேன், இன்று வாழ்கிறேன், நாளை?
எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம்-வாழ்க்கையையும்
நடப்பது எல்லாம் நன்மைக்கே-இல்லை
நடப்பது எல்லாம் எனக்கே-எண்ணம் வேண்டும்
நல்லது, கெட்டது இல்லை-இது என் வாழ்க்கை
எனக்கு மட்டுமே தீர்மானிக்கும் உரிமை
யார் சொல்லி என்ன நடக்கும்
மனதுக்கு சரி என்றால் செய்வேன்-எதுவாக இருந்தாலும்
சரியானது எது என்பதை தீர்மானிக்க-யோசிப்பேன் அதிகமாக
வாழ்க்கையை வாழ வேண்டும்-உயிர் போகும் வரை.

கே.வி.நிக்சன்.