Thursday, January 28, 2010


நன்றி பாலா.

Saturday, January 16, 2010

தேவலோகத்தில் ஒரு நாள்...


மறதி

மனிதனுக்கு மறதி அவசியம். எல்லாவற்றையும் நினைவில் வைத்திருத்தல் நல்லதல்ல. சிலவற்றை மறந்தாகவே வேண்டும். நமக்கு உதவியவர்களை மறக்க கூடாது, நாம் உதவியவர்களை கணக்கில் வைத்திருக்க கூடாது. கணகக்கிடுவது கடமையாகாது. மறதி என்றதும் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது...
தேவலோகத்தில் ஒரு நாள் பகவான் விஷ்ணுவை சந்தித்த தேவர்கள், ''பூலோகத்தில் மும்மாரி மழை பொழிவதால் செல்வ செழிப்பு அதிகரித்துவிட்டது. மக்கள் அனைவரும் மகிழ்சியாக இருக்கின்றனர். இந்த மகிழ்ச்சி காரணமாக பகவானான உங்களை நினைத்து பார்க்கவும் வழிபடவும் மக்கள் மறந்துவிட்டனர். வறுமை வந்தால் மட்டுமே உங்களை அவர்கள் இனி நினைத்து பார்ப்பார்கள். எனவே அடுத்த 5 ஆண்டுக்கு மழை பொழியத் தூண்டும் சக்கரபானத்தை நீங்கள் உபயோகப்படுத்த கூடாது" என்றனர்.
தேவர்கள் கூறியதை கேட்ட விஷ்ணுவும், "அப்படியே ஆகட்டும்" என்றார்.
ஓர் ஆண்டுக்கு பின் பூலோகத்தில் ஒரு நாள் வயல்வெளி நடுவே இருக்கும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெரியவர் ஒருவர், ஏர் பூட்டி வயலில் உழுது கொண்டிருந்த விவசாயியை பார்த்து கேட்டார், "ஏப்பா நான் தினமும் காலையில் இந்த சாலையில் செல்லும் போதெல்லாம் பார்க்கிறேன் நீ ஏர் பூட்டி வயலை உழுது கொண்டிருக்கிறாயே. மழை பெய்து ஒரு வருடத்துக்கு மேலாகிறது. மழை பெய்வதற்கான அறிகுறிகளும் இல்லை. பிறகு ஏன் தினமும் வயலை உழுது கொண்டிருக்கிறாய்?" என்றார்.
அதற்கு அந்த விவசாயி கூறினார், ''மழை எப்போது வேண்டுமானாலும் பெய்யட்டும். அதற்காக நான் சும்மா இருந்தால் ஏர் பிடித்து உழுவதை மறந்துவிடுவேன். மறந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தினமும் உழுது கொண்டிருக்கிறேன்" என்றார்.
அடுத்த வினாடியே மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது.
தேவலோகத்தில் பகவான் விஷ்ணுவிடம் ஓடி வந்து முறையிட்ட தேவர்கள், ''பூலோகத்தில் மழை பொழிகிறது. அப்படி என்றால் நீங்கள் சக்கரபானத்தை உபயோகப்படுத்திவிட்டீர்கள். இல்லையா" என்றனர். அதற்கு பகவான், ''ஆமாம்" என்றார். தேவர்களோ, ''5 ஆண்டுகள் சக்கரபானத்தை உபயோகப்படுத்த கூடாது என்று நாங்கள் உங்களிடம் கேட்டுக் கொண்டோமே. அதற்கு என்ன பதில் தரப் போகிறீர்கள்" என்றனர்.
பகவான் கூறினார், ''பூலோகத்தில் விவசாயி கூறியதை கேட்டீர்களா. 5 ஆண்டுகள் சக்கரபானத்தை உபயோகப்படுத்தாமல் சும்மா இருந்துவிட்டால் எங்கே மறந்துவிடுமோ என நினைத்து ஒருமுறை சக்கரபானத்தை உபயோகப்படுத்தி பார்த்தேன். அவ்வளவுதான்" என்றார்.
தேவர்களுக்கு அப்போதுதான் புரிந்தது பகவான் விஷ்ணுவின் விளையாட்டு.
இது கதையாக இருந்தாலும் அதிலுள்ள உண்மையை நாம் உணர வேண்டும். எதை மறக்க வேண்டும், எதை கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

-கே.வி. நிக்சன்.

Friday, January 15, 2010

எல்லாம் புனிதம்...


எது புனிதம்?

வாந்தி புனிதம், எச்சில் புனிதம் மற்றும் பிணத்தின் உடை புனிதம். இவைகள் எப்படி புனிதமாகும் என எண்ணத் தோன்றுகிறதா?
ஆம்! வாந்தி புனிதம்தான் அது தேனீக்களின் வாயில் இருந்து தேனாக வரும் போது.
எச்சில் புனிதம்தான், கன்றுகுட்டி எச்சில்பட்ட பசுவின் மடியில் இருந்து பால் கரக்கப்படும் போது.
பிணத்தின் உடை புனிதம்தான் அது செத்த பட்டுப்பூச்சியின் உடையான கூட்டில் இருந்து நூல் எடுக்கப்பட்டு பட்டுத் துணியாகும் போது.
புனிதம் என்பது எல்லா இடத்திலும், எல்லா பொருட்களிலும், எல்லா செயலிலும் இருக்கிறது. அதை நாம்தான் தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

கே.வி. நிக்சன்.

HUMAN BEING அல்ல HUMAN GROWING...


தேனீக்களுக்கும் மனிதர்களுக்கு என்ன வித்தியாசம்?

கற்கால மனிதனுக்கு கல்லை கூட பயன்படுத்த தெரியாது. ஆனால் தேனீக்களுக்கு அப்போதே அழகான சின்ன, சின்ன அறைகள் கொண்ட ஒரு பெரிய தேன் சேகரிக்கும் கூட்டை கட்ட தெரியும். அப்படி என்றால் மனிதனைவிட தேனீக்கள் அறிவாளிகளா?
கற்கால மனிதன் இன்று எவ்வளவோ வளர்ச்சியடைந்து விண்ணை முட்டும் அளவுக்கு உயரமான, அழகான கட்டிடங்களை கட்ட கற்றுக் கொண்டுவிட்டான். ஆனால் தேனீக்களுக்கு இன்றுவரை தேன் கூடு மட்டுமே கட்டத் தெரியும். தேனீக்கள் வளர்ச்சியடையவில்லை. இதுதான் மனிதர்களுக்கும் தேனீக்களுக்கும் உள்ள வித்தியாசம். நாம் HUMAN BEING(ஒரு நிலையில் இருப்பது) அல்ல HUMAN GROWING(வளர்ச்சியடைவது).

-கே.வி. நிக்சன்.

Monday, January 11, 2010

புதிய பாதை


புதிய பாதை...

அடர்ந்த காட்டுப்பகுதி!
கண் முன்பு இரண்டு சாலைகள்!!
இடையில் மூங்கில் காடு!!!

எந்த சாலையில் செல்வது?
நான் ஒருவன் மட்டுமே அங்கு!!
தேர்ந்தெடுப்பதில் குழப்பம் எனக்கு!!!

ஒரு சாலை - வளைவுகள் அதிகம்!
ஏற்றம் இறக்கம் நிறைந்தது!!
முற்செடிகளுடன் கரடுமுரடானது!!!

இதுவரை யாரும் பயணிக்காத சாலை!!!

அடுத்தது - சீரானது, நேரானது!
புல்வெளி நிறைந்தது, பசுமையானது!!
பயணிக்க சிறந்தது, எளிமையானது!!!

பலரது கால் தடம் பதிந்த சாலை!!!

இது என் வாழ்க்கையை, வருங்காலத்தை!
தீர்மானிக்கும் சாலை - எதை தேர்ந்தெடுப்பது?
அடுத்த ஒரு அடி நீண்ட பயணத்தின் தொடக்கம்!!!

காலங்கள் ஓடின!
என் பயணம் தொடர்கிறது!!
இது வரை யாரும் பயணிக்காத சாலையில்!!!

என்னுள் இருக்கும் துணிச்சலை உணர்ந்தேன்!!!

-கே.வி. நிக்சன்.

Sunday, January 10, 2010

GOLDEN WORDS!!!


GOLDEN WORDS TO REMEMBER...

The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
-Robert Frost.

Men May come and Men May Go,
But I Go on for Ever.
-Alfred Lord Tennyson.

நெடுந்தூரம் செல்ல வேண்டும்...


நெடுந்தூரம் செல்ல வேண்டும்...

அது குளிர் காலம்.
மாலை நேரத்தில்,
நான் அங்கு நின்றேன்-ஏன்?

அழகான பூந்தோட்டம்.
குளிர்ந்த காற்றில்,
ஆடுகின்ற மலர்கள்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை,
தலையாட்டும் மலர்கள்-யாருடையது?
என் ஊரை சேர்ந்தவருடையது.

எனது மாடுகள் தலையாட்டின.
மணிசலங்கை ஒலி உணர்த்தின.
நான் வீடு சென்றடைய வேண்டும்.

மலர் கூட்டத்தில் இருந்து,
என் கண்களை விடுவித்தேன்.
பார்த்தேன். நெடுந்தூரம் செல்ல வேண்டும்.

ஒற்றையடி மாட்டு வண்டி பாதை அது,
ஊர் சென்றடைய நான்,
நெடுந்தூரம் செல்ல வேண்டும்.

மன நினைவலைகளில்,
மலர் கூட்டம் அழகு-குளிர் காற்று தழுவ,
பயணத்தை தொடர்ந்தேன்.

ஒற்றையடி மாட்டு வண்டி பாதை அது.
ஊர் சென்றடைய நான்,
நெடுந்தூரம் செல்ல வேண்டும்.

-கே.வி. நிக்சன்.

Monday, January 4, 2010

RARE PHOTOS!!!














தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களின் அரிய புகைப்படங்கள்.

Sunday, January 3, 2010

வழக்கும் விசாரணையும் நாடகமல்ல

சிரிப்பு மறைந்து குற்றவுணர்வு மேலோங்கியது; வழக்கும் விசாரணையும் நாடகமல்ல என்பதை முகமது அஜ்மல் கசாப் உணர்ந்தான்

தொடக்கத்தில் தன் மீதுள்ள வழக்கும் நீதிமன்ற விசாரணையும் ஒரு நாடகம் என எண்ணி நகைத்த, மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீவிரவாதி முகமது அஜ்மல் கசாப், தற்போது தான் செய்த குற்றத்தை உணர்ந்து வெட்கி தலைகுணிந்து தண்டனையை ஏற்க தயாராகிவிட்டான்.
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதி முகமது அஜ்மல் கசாப். 21 வயதான இவன் மீது பல்வேறு சட்டப்பிரிவின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கை ஆர்தர் ரோடு சிறை வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
ஏப்ரல் 15ம் தேதி. அன்றுதான் வழக்கு விசாரணை தொடங்கியது. ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் நானும் வழக்கு விசாரணையை கவணிக்க சென்றிருந்தேன். அதுநாள் வரைக்கும் பத்திரிகைகளில் மட்டுமே கசாப்பின் புகைப்படத்தை பார்த்து வந்த நான், முதல் முறையாக அவனை நேரில் பார்த்தேன். ஒரு டி-சர்ட், நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்த கசாப், பக்கத்து வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்ததற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறானோ என எண்ண தோன்றியது. அப்படி ஒரு பால் வடியும் முகம் அவனுக்கு.
பலரை சுட்டுக் கொன்ற பயங்கர தீவிரவாதி என்பதால் கசாப்பை, புல்லட் புரூப் ஜாக்கெட் மற்றும் ஹெல்மட் அணிந்திருந்த இரண்டு போலீஸ்காரர்கள் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்குள் அழைத்து வந்தனர். நீதிபதி எம்.எல்.தஹலியாணி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அங்கிருந்த அனைவரது மத்தியிலும் ஒருவித நிசப்தம் நிலவ, நீதிமன்றத்துக்குள் நுழைந்த கசாப்பின் முகத்திலோ ஒருவித நகைப்பு தென்பட்டது. நீதிபதி, வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள், போலீசார் மற்றும் பத்திரிகையாளர்களை பார்த்த கசாப்புக்கு நடப்பதெல்லாம் ஒரு நாடகம் போல தோன்றியிருக்கிறது. எப்படியும் தன்னை கொல்லப் போகிறார்கள் என்பதை அறிந்தும் அவனது முகத்தில் பயம் தென்படவில்லை.

''உன்னுடைய வழக்கறிஞர் யார்" என நீதிபதி கசாப்பிடம் கேட்க, அவனோ நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண் கிளார்க்கை நோக்கி கையை காட்டினான். நீதிபதி உடனே அவனது வழக்கறிஞரானா அஞ்சலி வாக்மாரேயை சுட்டிக் காட்ட, ''ஓ மறந்துவிட்டேன்" என்றான் கசாப். அவனது முகத்தில் சிரிப்பை தவிர வேறு எதுவும் இல்லை.
ஆனால் இந்த சிரிப்பு அவனுக்கு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. நாட்கள் செல்ல, விசாரணையின் போது சாட்சிகள் அவனை தீவிரவாதி என அடையாளம் காட்ட, கசாப் தான் செய்த குற்றத்தை உணரத் தொடங்கினான். அவன் சுட்டதில் குண்டடிப்பட்டு காயமடைந்து ஊனமான 10 வயது சிறுமி நீதிமன்றத்தில் ஆஜராகி கசாப்பை நோக்கி கையை காட்டி ''அவன்தான் என்னை சுட்டான்" என கூறிய போது கசாப் முகத்தில் மாற்றம் ஏற்பட்டது. சிரிப்பு மறைந்து குற்ற உணர்வு மேலோங்கியது. தான் ஒரு குற்றவாளி என்பதை அவன் அறியத் தொடங்கினான்.
அன்று தொடங்கி இன்று வரை ''என்னை தூக்கிலிடுங்கள்" என நீதிமன்றத்திடம் கசாப் கெஞ்கி வருகிறான். ஆனால் இந்திய நீதித்துறை எப்போதுமே அவசரப்படுவதில்லை. கசாப் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது......

-கே.வி. நிக்சன்.

ஹைகூ கவிதைகள்


பிரதிபலிப்பு
தன் உடைகளை சரி செய்கிறாள்!
எதிர் வரும் ஆணை பார்த்து!!
பெண்களின் சாலையோர கண்ணாடி!!!


தாஜ்மஹல்
ஏழைகளின் ரத்தத்தில்!
சிவப்பு அணுக்களை திண்று!!
உருவானது ஒரு வெள்ளை அணு!!!


காதல்
நானும் அவளும்!
இணைந்து இருக்கிறோம்!!
தொடுவானமும் தூரக்கடலும் போல!!!


சீன பெருஞ்சுவர்
மக்களை பிரிக்க, பூமியை துண்டாட!
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு!!
தீட்டப்பட்ட சதி!!!


கொலுசு
கலகலவென சிரிப்பவள்!
இன்று ஓரமாய்...ஊமையாய்!!
காலிழந்ததால்!!!

வியர்வை
உழைக்கும் வர்க்கத்துக்கு!
ரத்தம் அளிக்கும் குளிர்ச்சி-உழைக்காதவர்களுக்கு!!
அது, ரத்தக் கண்ணீர் துளிகள்!!!

பாராட்டு விழா
மலர் தூவும் மழை மேகம்-கைத்தட்டும் இடியோசை!
புகைப்படம் எடுக்கும் மின்னல் ஒளி!!
பூமிக்கு இன்று பாராட்டு விழா!!!

-கே.வி. நிக்சன்.

44 Lessons Life Taught Me

1. Life isn't fair, but it's still good.
2. When in doubt, just take the next small step.
3. Life is too short to waste time hating anyone.
4.. Your job won't take care of you when you are sick.. Your friends and parents will. Stay in touch.
5. Pay off your credit cards every month.
6. You don't have to win every argument.. Agree to disagree.
7. Cry with someone. It's more healing than crying alone.
8. It's OK to get angry with God. He can take it.
9. Save for retirement starting with your first paycheck.
10. When it comes to chocolate, resistance is futile.
11. Make peace with your past so it won't screw up the present.
12. It's OK to let your children see you cry.
13. Don't compare your life to others. You have no idea what their journey is all about.
14. If a relationship has to be a secret, you shouldn't be in it.
15. Everything can change in the blink of an eye. But don't worry; God never blinks.
16. Take a deep breath. It calms the mind.
17. Get rid of anything that isn't useful, beautiful or joyful.
18. Whatever doesn't kill you really does make you stronger.
19. It's never too late to have a happy childhood. But the second one is up to you and no one else.
20. When it comes to going after what you love in life, don't take no for an answer.
21. Burn the candles, use the nice sheets, wear the fancy lingerie... Don't save it for a special occasion. Today is special.
22. Over prepare, then go with the flow.
23. Be eccentric now. Don't wait for old age to wear purple.
24. No one is in charge of your happiness but you.
25. Frame every so-called disaster with these words ''In five years, will this matter?".
26. Always choose life.
27. Forgive everyone everything.
28. What other people think of you is none of your business
29. Time heals almost everything. Give time, time.
30. However good or bad a situation is, it will change.
31. Don't take yourself so seriously... No one else does.
32. Believe in miracles.
33. God loves you because of who God is, not because of anything you did or didn't do.
34. Don't audit life. Show up and make the most of it now.
35. Growing old beats the alternative -- dying young.
36. Your children get only one childhood..
37. All that truly matters in the end is that you loved.
38. Get outside every day. Miracles are waiting everywhere.
39. If we all threw our problems in a pile and saw everyone else's, we'd grab ours back.
40. Envy is a waste of time. You already have all you need.
41... The best is yet to come.
42. No matter how you feel, get up, dress up and show up.
43. Yield.
44. Life isn't tied with a bow, but it's still a gift.

K.V. NICKSON.

A Man With out Any Bad Habit

Once a man was waiting for taxi.
A beggar came along and asked him for some money. The man ignored him. But being a professional, the beggar kept on pestering him. The man became irritated when he realized that the beggar would not leave him alone unless he parts with some money.
Suddenly an idea struck him. He told the beggar, "I do not have money, but if you tell me what you want to do with the money, I will certainly help you." "I would have bought a cup of tea", replied the beggar.
The man said, "Sorry man. I can offer you a cigarette instead of tea". He then took a pack of cigarettes from his pocket and offered one to the beggar.

The beggar told, "I don't smoke as it is injurious to health."
The man smiled and took a bottle of whisky from his pocket and told the beggar, "Here, take this bottle and enjoy the stuff. It is really good".

The beggar refused by saying, "Alcohol muddles the brain and damages the liver".
The man smiled again. He told the beggar, "I am going to the race course. Come with me and I will arrange for some tickets and we will place bets. If we win, you take the whole amount and leave me alone".
As before, the beggar politely refused the latest offer by saying, "Sorry sir, I can't come with you as betting on horses is a bad habit."
Suddenly the man felt relieved and asked the beggar to come to his home with him. Finally, the beggar's face lit up in anticipation of receiving at least something from the man. But he still had his doubts and asked the man, "Why do you want me to go to your house with you".
The man replied, "I always wanted to show my wife how a man with no bad habits will look like." :):):):):):):):):):)

-K.V. NICKSON.