Monday, January 11, 2010

புதிய பாதை


புதிய பாதை...

அடர்ந்த காட்டுப்பகுதி!
கண் முன்பு இரண்டு சாலைகள்!!
இடையில் மூங்கில் காடு!!!

எந்த சாலையில் செல்வது?
நான் ஒருவன் மட்டுமே அங்கு!!
தேர்ந்தெடுப்பதில் குழப்பம் எனக்கு!!!

ஒரு சாலை - வளைவுகள் அதிகம்!
ஏற்றம் இறக்கம் நிறைந்தது!!
முற்செடிகளுடன் கரடுமுரடானது!!!

இதுவரை யாரும் பயணிக்காத சாலை!!!

அடுத்தது - சீரானது, நேரானது!
புல்வெளி நிறைந்தது, பசுமையானது!!
பயணிக்க சிறந்தது, எளிமையானது!!!

பலரது கால் தடம் பதிந்த சாலை!!!

இது என் வாழ்க்கையை, வருங்காலத்தை!
தீர்மானிக்கும் சாலை - எதை தேர்ந்தெடுப்பது?
அடுத்த ஒரு அடி நீண்ட பயணத்தின் தொடக்கம்!!!

காலங்கள் ஓடின!
என் பயணம் தொடர்கிறது!!
இது வரை யாரும் பயணிக்காத சாலையில்!!!

என்னுள் இருக்கும் துணிச்சலை உணர்ந்தேன்!!!

-கே.வி. நிக்சன்.

No comments:

Post a Comment