Saturday, September 25, 2010

எல்லாமே ஒன்று


காட்டு பாதையில்-நீ
ஒற்றை மலர்
ஆழ்கடல் பயணத்தில்-நீ
ஒற்றை முத்து
இரவு வேளையில்-நீ
ஒற்றை நட்சத்திரம்
பசுமை கால மரக்கிளையில்-நீ
ஒற்றை இலை
மழை கால வானில்-நீ
ஒற்றை கார்மேகம்
வானவில் வண்ணங்களில்-நீ
ஒற்றை நிறம்
சுற்றி வரும் பூகோலத்தில்-நீ
ஒற்றை திசை
தமிழ் சொற்களில்-நீ
ஒற்றை எழுத்து
-இந்த புலம்பலில்
'நீ' மட்டுமே உண்மை.

-கே.வி. நிக்சன்.

Saturday, September 18, 2010

நோய் அல்ல ஊட்டச்சத்து


தூக்கம் வராது என்பார்கள்-ஆனால்
நீ கனவில் வரும் தருணத்துக்காக ஏங்கி-நன்றாக தூங்குகிறேன்.
மறதி ஏற்படும் என்பார்கள்-ஆனால்
உன் தேன்மொழி வார்த்தைகளின் முதல் சொல்-இன்றும் என் நினைவில்...
பசி எடுக்காது என்பார்கள்-ஆனால்
உன் கை கோர்த்து வெகுதூரம் நடந்தால்-நன்றாக பசிக்கிறது.
பார்ப்பதெல்லாம் அவள் என்பார்கள்-ஆனால்
உன்னை மட்டும் அடையாளம் காணும் எனக்கு-மற்றவை மற்றவையே.
இதுவரை கனவுலகில் இருந்த நான்-இப்போது
உணர்வுலகுக்கு வந்துவிட்டேன், உன் காதலை உணர்கிறேன்.
காதல் நோயல்ல- அது ஊட்டச்சத்து.
-கே.வி. நிக்சன்.