Saturday, September 25, 2010

எல்லாமே ஒன்று


காட்டு பாதையில்-நீ
ஒற்றை மலர்
ஆழ்கடல் பயணத்தில்-நீ
ஒற்றை முத்து
இரவு வேளையில்-நீ
ஒற்றை நட்சத்திரம்
பசுமை கால மரக்கிளையில்-நீ
ஒற்றை இலை
மழை கால வானில்-நீ
ஒற்றை கார்மேகம்
வானவில் வண்ணங்களில்-நீ
ஒற்றை நிறம்
சுற்றி வரும் பூகோலத்தில்-நீ
ஒற்றை திசை
தமிழ் சொற்களில்-நீ
ஒற்றை எழுத்து
-இந்த புலம்பலில்
'நீ' மட்டுமே உண்மை.

-கே.வி. நிக்சன்.

No comments:

Post a Comment