Wednesday, August 11, 2010

நானும் பெரியவன்...


ஆருயிர் நண்பனை வரவேற்க
இலக்கண விதியை மீறினான்-கண்ணன்!!

தந்தையின் சபதத்தை நிறைவேற்ற
கொலை களம் புகுந்தான்-பரசுராமன்!!

அருமை தங்கையை சமாதானப்படுத்த
மானுட தர்மத்தை மீறினான்-ராவணன்!!

குடிவாசிகளின் சந்தேகத்தை போக்க
மனைவியை தீக்குளிக்க செய்தான்-ராமன்!!

அழகு மயிலின் துயர் துடைக்க
இயற்கை விதியை மீறினான்-பேகன்!!

இந்த வரிசையில் நானும்...

தவறு செய்பவர்களே பெரியவர்கள்!!
நானும் பெரியவன்...

-கே.வி. நிக்சன்.

No comments:

Post a Comment