Wednesday, April 7, 2010

வாழ்க்கையை வாழ வேண்டும்...


யார் சொல்லி என்ன நடக்கும்

நேற்றும் இன்றும் நாளையும்-எனக்கு ஒன்றுதான்
நேற்று வாழ்ந்தேன், இன்று வாழ்கிறேன், நாளை?
எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம்-வாழ்க்கையையும்
நடப்பது எல்லாம் நன்மைக்கே-இல்லை
நடப்பது எல்லாம் எனக்கே-எண்ணம் வேண்டும்
நல்லது, கெட்டது இல்லை-இது என் வாழ்க்கை
எனக்கு மட்டுமே தீர்மானிக்கும் உரிமை
யார் சொல்லி என்ன நடக்கும்
மனதுக்கு சரி என்றால் செய்வேன்-எதுவாக இருந்தாலும்
சரியானது எது என்பதை தீர்மானிக்க-யோசிப்பேன் அதிகமாக
வாழ்க்கையை வாழ வேண்டும்-உயிர் போகும் வரை.

கே.வி.நிக்சன்.

No comments:

Post a Comment