
தேனீக்களுக்கும் மனிதர்களுக்கு என்ன வித்தியாசம்?
கற்கால மனிதனுக்கு கல்லை கூட பயன்படுத்த தெரியாது. ஆனால் தேனீக்களுக்கு அப்போதே அழகான சின்ன, சின்ன அறைகள் கொண்ட ஒரு பெரிய தேன் சேகரிக்கும் கூட்டை கட்ட தெரியும். அப்படி என்றால் மனிதனைவிட தேனீக்கள் அறிவாளிகளா?
கற்கால மனிதன் இன்று எவ்வளவோ வளர்ச்சியடைந்து விண்ணை முட்டும் அளவுக்கு உயரமான, அழகான கட்டிடங்களை கட்ட கற்றுக் கொண்டுவிட்டான். ஆனால் தேனீக்களுக்கு இன்றுவரை தேன் கூடு மட்டுமே கட்டத் தெரியும். தேனீக்கள் வளர்ச்சியடையவில்லை. இதுதான் மனிதர்களுக்கும் தேனீக்களுக்கும் உள்ள வித்தியாசம். நாம் HUMAN BEING(ஒரு நிலையில் இருப்பது) அல்ல HUMAN GROWING(வளர்ச்சியடைவது).
-கே.வி. நிக்சன்.
No comments:
Post a Comment